Monday, September 6, 2010
ஆட்ட நிர்ணய சதியில் டி.எம்.டில்ஷான் ??
ஆட்ட நிர்ணய சதி குறித்து இலங்கையின் முக்கிய வீரர் தொடர்பில் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதென பிரித்தானிவில் வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின்போது ஒருநாள் இரவு நபரொருவருடன் இலங்கை வீரரொருவர் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை இலங்கை அணி வீரர் , குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அணி வீரர் குமார சங்கக்காரவிற்கு அறிவித்ததாகவும், இது தொடர்பில் குமார சங்கக்காரவும் ஐசிசி யின் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் பிரித்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது டில்ஷானாகவே இருக்கும் என்று பரவலாக பேசப்படுகிறது..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment